ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவரில் யாருக்கு வாய்ப்பு?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா இருவரில் யாருக்கு வாய்ப்பு?
By : Kathir Webdesk
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருக்கும் இடம் இருக்காது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. அதற்கான அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுக்கு இடம் கண்டிப்பாக இருக்கும். இவருடன் துவக்க ஆட்டக்காரராக ப்ரிதிவி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
இதனைப்பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியது: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் இருக்காது. ஏனென்றால் அவர் முதுகு பகுதி பிரச்சனையால் ஆபரேஷன் செய்த பின்னர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் கூட விளையாட வில்லை. இதனால் இந்த குறுகிய காலத்தில் அவருடைய உடற்தகுதி முன்னேற்றம் அடையும் என்பது சந்தேகம்.
பின்னர் சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் சென்ற முறை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு ரவிச்சந்திரன் இருக்கிறார். இவர்களை எப்பிடி விடமுடியும். இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடம் கிடைப்பது சந்தேகம் என தெரிவித்துள்ளார்.