#பிரேக்கிங் : பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.!
#பிரேக்கிங் : பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி.!
By : Kathir Webdesk
கொரோனாதொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி கொண்டு வருகிறது. மேலும் மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் இந்த தொற்று அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரேகா வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன் அபிஷேக்பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருவருக்கும் கொரோனா தொற்று பரவியதால் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐஸ்வர்யா ராய்க்கும் ஜெயா பச்சன் ஆகியிருக்கும் கொரோனா முடிவுகள் வந்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக அமிதாப்பச்சன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் நான் மருத்துவமனையில் இருப்பதாகவும் என் வீட்டில் பணியாற்றிய பணியாளர்கள் அனைவருக்கும் டெஸ்ட் செய்ய கூறியிருப்பதாக கூறியுள்ளார்.
இன்னும் அவர்களுக்கு முடிவுகள் வரவில்லை.
அமிதாபச்சன் கூறுவது
கடந்த 10 நாட்களாக என்னுடன் பழகியவர்கள் அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து அவர் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.