உங்களை நாங்க தொட்டுக்கூட பார்க்க மாட்டோம் .. இந்தியாவுக்கு ஐஸ் வைக்கும் சீனா! பெய்ஜிங்கில் இருந்து வெளிவந்த தகவல்!
உங்களை நாங்க தொட்டுக்கூட பார்க்க மாட்டோம் .. இந்தியாவுக்கு ஐஸ் வைக்கும் சீனா! பெய்ஜிங்கில் இருந்து வெளிவந்த தகவல்!
By : Kathir Webdesk
ஜூலை 2 ஆம் தேதி (வியாழக்கிழமை) பெய்ஜிங்கில் நடந்த கூடத்தில் இந்தியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் மீது எவ்விதமான தடை நடவடிக்கைகளையும் விதிக்கவில்லை என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்தது.
உண்மையில், சீன - இந்தியப் பொருளாதார வர்த்தகத் துறையில் இன்று காணப்பட்டுள்ள ஒத்துழைப்புச் சாதனைகள், இருதரப்பு அரசுகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகளின் விளைவாகும். இது, இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இன்றைய பொருளாதாரத்தின் உலகமயமாக்கலில், பல்வேறு நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் சூழலில், முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஆக்கப்பூர்வ பங்காற்று வருகின்றன என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தொழில் புரிவதற்குரிய ஒரே மாதிரியான நியாயமான சூழலை உருவாக்குவது அவசியமானது.
இந்தச் சூழலில் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு, இரு நாட்டு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நலன் தரும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை தொடர்ச்சியாக மேற்கொள்வதை எதிர்பார்க்கின்றோம் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீன வணிக அமைச்சகத்தின் இந்தப் பதில் கவனத்தை ஈர்த்துள்ளது.