'கைதி' படத்தை அடுத்து "ஓ மை கடவுளே" திரைப்படத்திற்கும் சர்வதேச அங்கீகாரம்.!
'கைதி' படத்தை அடுத்து "ஓ மை கடவுளே" திரைப்படத்திற்கும் சர்வதேச அங்கீகாரம்.!
By : Kathir Webdesk
அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான படம் ஓ மை கடவுளே. இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், வாணிபோஜன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியான படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பெற்று வந்தது. வித்தியாசமான கதை தோற்றத்தில் இதுவரை யாரும் இதுபோல் எடுக்காத அளவிற்கு மிகுந்த கற்பனை, கொண்ட இந்த படத்தை அனைவரும் பார்த்து ரசித்து வந்தனர்.
இந்த படம் ஹிந்தி,தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு டொரன்டோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் "ஓ மை கடவுளே" என்ற படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் இவர் தனது முதல் படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், படத்தில் நடித்த நடிகர்,நடிகையர், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.