வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கை - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!
வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் புதிய கல்விக்கொள்கை - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை!
By : Kathir Webdesk
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கியுள்ளார்.
அதில், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆற்றலாளர்களாக மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கையின் இலக்கு
தற்போதைய கல்வி முறையில் உள்ளதுபோன்று, வெறுமனே மனப்பாடம் செய்வதால் பிரயோஜனமில்லை. கூர்மையான அறிவுத்திறனை அதிகரிக்கச் செய்யும் ஆப்டியூடு முறை கற்றலே சிறந்த ஒன்றாகும்
புதிய கல்விக் கொள்கை மூலம், அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். கற்றல், ஆராய்ச்சி, மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது
கற்றலோடு, ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு என்று பேசி வருகிறார்.