Kathir News
Begin typing your search above and press return to search.

கறுப்பர் கூட்டத்தை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிரணி காவடி எடுத்து ஆர்ப்பாட்டம்!

கறுப்பர் கூட்டத்தை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிரணி காவடி எடுத்து ஆர்ப்பாட்டம்!

கறுப்பர் கூட்டத்தை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க மகளிரணி காவடி எடுத்து ஆர்ப்பாட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 11:19 AM GMT

முருக பெருமானை வழிபடும் வகையிலான கந்தர் சஷ்டி கவசத்தை விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பதிவிடப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய சுரேந்தர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முத்தியால்பேட்டை முருகன் கோயில் முன்பு நடைபெற்றது.


பா.ஜ.க மகளிரணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பா.ஜ.க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், மாநில துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்,கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் நபர்களை கண்டித்தும், தொடர்ந்து இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் சமூக விரோதிகளை கண்டித்தும், சுந்தரவல்லி போன்றவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கையில் வேல் படம் வரைந்தும், காவடி தூக்கியும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News