Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : சமூக நலத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - சக அமைச்சர்கள் கலக்கம்.!

புதுச்சேரி : சமூக நலத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - சக அமைச்சர்கள் கலக்கம்.!

புதுச்சேரி : சமூக நலத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - சக அமைச்சர்கள் கலக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 7:15 AM GMT

புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 25 ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 27 ம் தேதி முதல்வர் உட்பட 126 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் கந்தசாமிக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சரவை கூட்டம் உட்பட பல நிகழ்வுகளில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டார். இந்நிலையில் அமைச்சர் கந்தசாமியின் தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள வீட்டில் இருந்த அமைச்சர் கந்தசாமி, மனைவி, 2 மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அமைச்சர் கந்தசாமிக்கும், அவரது இளைய மகனுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 31-ந் தேதி தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டார். இதனால் மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News