Begin typing your search above and press return to search.
ஆந்திராவில் திருமணம் கூட இனி நடத்த முடியாது ! சோகத்தில் மக்கள் !
ஆந்திராவில் திருமணம் கூட இனி நடத்த முடியாது ! சோகத்தில் மக்கள் !

By :
கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை ஒட்டி திருமண விழாக்களை
தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மக்களுக்கு ஆந்திர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திராவில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திர அரசு ஆந்திராவில் உள்ள கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூட உத்திரவிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விசேஷங்களையும் தற்காலிகமாக நிறுத்தி, அதை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆந்திர அரசு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story