Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திர எல்லைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.. வாகனங்களுக்கு மருந்து தெளித்த பின்னரே தமிழகத்துக்கு அனுமதி !

ஆந்திர எல்லைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.. வாகனங்களுக்கு மருந்து தெளித்த பின்னரே தமிழகத்துக்கு அனுமதி !

ஆந்திர எல்லைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்.. வாகனங்களுக்கு மருந்து தெளித்த பின்னரே தமிழகத்துக்கு அனுமதி !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 March 2020 5:20 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடக எல்லைகளில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை கடந்துதான் போக வேண்டும்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று அண்டை மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையான காளிக்கோயில் என்ற இடத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு முன்னெச்சரிக்கையாக நோய் பரவாமல் இருக்க மருந்து தெளிக்கப்டுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர், டி.எஸ்.பி.இராஜேந்திரன், பர்கூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பர்கூர் தாசில்தார் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News