Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வார்டில் பிரியாணி கேட்டு அடம், விரக்தியில் மருத்துவமனையை சேதப்படுத்தி அட்டுழியம்.!

கொரோனா வார்டில் பிரியாணி கேட்டு அடம், விரக்தியில் மருத்துவமனையை சேதப்படுத்தி அட்டுழியம்.!

கொரோனா வார்டில் பிரியாணி கேட்டு அடம், விரக்தியில் மருத்துவமனையை சேதப்படுத்தி அட்டுழியம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 8:02 AM GMT

கோவை, சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரியாணி கேட்டு மருத்துவமனையை சேதப்படுத்திய இஸ்லாம் வாலிபரை பார்த்து மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தமிழகத்தில் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய வாலிபர் பிரியாணி கேட்டு மருத்துவர்களிடம் தொல்லை கொடுத்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசைவ உணவு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அந்த நபரின் மனைவி வீட்டில் பிரியாணி சமைத்து மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளார்.

அப்போது மருத்துவமனை நிர்வாகம் வாலிபரின் மனைவியை அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவியை உடைத்துள்ளார்.

இதனை பார்த்து மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News