Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, நள்ளிரவில் பத்திரிக்கையாளர் அர்னாப்பை கைது செய்தது மும்பை போலீஸ் !

வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, நள்ளிரவில் பத்திரிக்கையாளர் அர்னாப்பை கைது செய்தது மும்பை போலீஸ் !

வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, நள்ளிரவில் பத்திரிக்கையாளர் அர்னாப்பை கைது செய்தது மும்பை போலீஸ் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Nov 2020 10:49 AM GMT

பால்கர் சாமியார்கள் கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இந்த கொலைக்கும் கிறிஸ்தவ மெஷினரிக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றார். மேலும் இந்த கொலை குறித்து மும்பை போலீசார் சரிவர விசாரிக்கததால் இதன் பின்னணியில் காங்கிரசார் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்டவர்கள் இந்து சாமியார்கள் என்பதால் சோனியா காந்தி இந்த விஷயத்தை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதனால் அர்நாப்பை கண்டித்து காங்கிரசாரும், காங்கிரஸ் உதவியுடன் மகாராஷ்ட்ராவில் ஆட்சி செய்துவரும் சிவசேனா அரசும் அவர் மீது பல வித வழக்குகளை ஜோடித்து சிறையில் தள்ள முயற்சித்தன.

ஆனால் நீதிமன்றம் பல வழக்குகளுக்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. இந்நிலையில் கடந்த 2019ல் முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு போலீசார் அர்நாப்பை கைது செய்துள்ளனர். மும்பை வீட்டிற்கு வந்து தன்னை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் அழைத்துச் சென்றதாக அர்னாப் புகார் கூறியுள்ளார். கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்கை 2018ல் தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே அர்னாப் மீது புகார் இருந்தது.

கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக்குக்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அன்வய் தற்கொலை என புகார் கூறப்பட்டது. ஆனால் 2019ல் முடிக்கப்பட்ட வழக்கை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் போலீஸ் மீண்டும் தோண்டி எடுத்து அராஜகமான முறையில் விசாரணையை தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News