முகக்கவசம் அணிந்து காய்கறிகளை விற்பனை செய்ய அறிவுறுத்திய முதலமைச்சர் நாராயணசாமி...
முகக்கவசம் அணிந்து காய்கறிகளை விற்பனை செய்ய அறிவுறுத்திய முதலமைச்சர் நாராயணசாமி...
By : Kathir Webdesk
புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3பேருக்கும் , திருபுவனை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் அப்பகுதியில் மேலும் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாநில முதலமைச்சர் நாராயணசாமி சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியை அமைச்சர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்டுகள் அனைத்தும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து வீராம்பட்டினம் பகுதிக்கு சென்ற முதலமைச்சர் நாராயணசாமி அப்பகுதியில் தற்காலிக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை பார்வையிட்டு அங்குள்ள சிறு வியாபரிகளுக்கு முககவசம் கொடுத்து சமூக இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.