கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தெருவில் வீசும் கொடுமை..
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தெருவில் வீசும் கொடுமை..

அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள ஈக்வடாரில் சென்ற சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.அந்த நாட்டின் குய்யாகு நகரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான அளவிற்கு மருத்துவ சிகிச்சை இல்லை மற்றும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகமாகி வருகிறது. வீட்டில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு கடைசியில் செய்யும் காரியங்களை கூட தற்போது செய்ய முடியவில்லை.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை உடலை தங்கள் குடும்பத்தினரும் மற்றும் உறவினரும் தெருக்களில் வீசி வருகிறார்கள். மேலும் இறந்தவர்களின் உடலை வீட்டின் முன்பு வைத்து துணியால் போர்த்தி விட்டு செல்கிறார்கள். சென்ற இரண்டு நாட்களில் மட்டும் 100 உடல்களை தெருக்களில் வீசி உள்ளனர். இதை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அனைத்து உடல்களையும் மீட்டுள்ளனர். கொரோனாவால் உள்ளூர் மருத்துவமனையில் இறந்தவர்களையும் இதைப்போல் தெருவில் வீசியுள்ளனர்.
இதனிடையே நகர நிர்வாகிகள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை ஒரு அட்டைப் பெட்டிகளில் வைத்து தெருவில் வைத்து விடுங்கள் என கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் உள்ளூர் மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை சேகரித்து வைக்கும் அளவிற்கு ஒரு நீளமான இரும்பு பொடியை வழங்கியுள்ளது.