Begin typing your search above and press return to search.
கொரோனா தாக்கம்: மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் பயணிகள் இந்தியா வர தடை!
கொரோனா தாக்கம்: மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் பயணிகள் இந்தியா வர தடை!

By :
மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் இந்தியா வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசால் இது வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 75 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து விமானம் இந்தியாவுக்கு புறப்படாது என்று அரசு சார்பில் பயண அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
Next Story