Begin typing your search above and press return to search.
மதுரை உசிலம்பட்டி இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!
மதுரை உசிலம்பட்டி இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!

By :
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக கூறுப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணை மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
அந்த இளம்பெண் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார், அவருக்கு தொடர்ந்து இருமல் சளி தொந்தரவு இருந்ததால் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அந்த இளம் பெண்மணி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் அடைந்தார்.
பின்னர் அந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த இளம் பெண்ணின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் பெண்ணே தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
Next Story