Kathir News
Begin typing your search above and press return to search.

COVID-19 வைரஸுக்கு ஆயுர்வேத தடுப்பு மருந்து - இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டு ஆராய்ச்சி.!

COVID-19 வைரஸுக்கு ஆயுர்வேத தடுப்பு மருந்து - இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டு ஆராய்ச்சி.!

COVID-19 வைரஸுக்கு ஆயுர்வேத தடுப்பு மருந்து - இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டு ஆராய்ச்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 9:30 AM GMT

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள ஒன்றாக பணிபுரிந்து வருவதாகவும் இரண்டு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா வைரஸுக்கு ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் மருந்து கண்டுபிடிக்க திட்டமிடுவதாகவும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து கூறியுள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவுடன் உரையாடிய சந்து, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையிலான தகவல் தொடர்பு இரு நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் ஒன்று சேர்த்துள்ளது என்று கூறினார். மேலும், இரு நாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஒன்றிணைந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றின் மூலம் ஆயுர்வேத மருத்துவ முறையை ஊக்குவிக்க இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"இரு நாடுகளிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கான ஆயுர்வேத மருந்து கலவைகளை பயன்படுத்தி மருத்துவ சோதனைகளைத் துவக்க திட்டமிட்டு வருகின்றனர்‌. நமது விஞ்ஞானிகள் இது குறித்த ஞானத்தையும் ஆய்வு தரவுகளையும் பகிர்ந்து வருகின்றனர் " என்று அவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து ஆராய்ச்சியைப் பற்றிக் கூறும் போது, இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து மூன்று தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த கூட்டு ஆராய்ச்சிகள் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News