Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்.! #Covid19 #JarkandCM

கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்.! #Covid19 #JarkandCM

கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்.! #Covid19 #JarkandCM

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 2:42 AM GMT

ஜார்க்கண்டில் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் மிதிலேஷ் தாக்குருக்கும், ஆளும்கட்சி எம்எல்ஏ மதுரா மஹாட்டோ என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் எம்எல்ஏ தனாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விசாரணை நடைபெற்றது. அதில், முதல்வர் ஹேமந்த் சோரனும் அவர்களுடன்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News