Begin typing your search above and press return to search.
கேரள காங்கிரஸ் இளைஞர்கள் படுகொலை வழக்கில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது
கேரள காங்கிரஸ் இளைஞர்கள் படுகொலை வழக்கில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது
By : Kathir Webdesk
கேரள மாநிலம், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த நபர்கள் காரில் சென்று இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்கள் தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
இதனை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பீதாம்பரம் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டுகளும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story