Begin typing your search above and press return to search.
அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அதிரடி முடிவு!
அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அதிரடி முடிவு!

By :
வங்கி தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகள்படி தனியார், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், வீ்ட்டு வசதி கழகம் ஆகியவற்றில் சீரமைப்பு செய்யப்பட்டபின் கடைசியாக இப்போது கூட்டுறவு வங்கிகளிலும் சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பான மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகள், 8.60 கோடி டெபாசிட்தாரர்கள், ரூ.5 லட்சம் கோடி சேமிப்புத் தொகை இவற்றை பாதுகாக்கும் பொருட்டு இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
Next Story