Kathir News
Begin typing your search above and press return to search.

ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு.க பிரமுகர் கைது #பாலியல்குற்றவாளிதிமுக ?

ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு.க பிரமுகர் கைது #பாலியல்குற்றவாளிதிமுக ?

ஒயின் கொடுத்து சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் : தி.மு.க பிரமுகர் கைது #பாலியல்குற்றவாளிதிமுக ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 May 2019 6:45 AM GMT


நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள நெல்லியாளம், டான்டீ சரகம்- --3 பகுதியைச் சேர்ந்தவர் திராவிடமணி, 54; தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின், மாவட்ட துணை அமைப்பாளர். கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி குழு தலைவர். இவர், தன் வீட்டருகில் உள்ள சிறுவர்களுக்கு, 'லேப்டாப்'பில் சினிமா காண்பிப்பது, 'கேம்ஸ்' விளையாட வைப்பது, சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவது போன்றவற்றை செய்து வந்துள்ளார்.


அப்போது, இரு சிறுவர்களுக்கு, வீட்டில் தயாரித்த நெல்லிக்காய், திராட்சை ஒயின் வழங்கி, மயக்கம்அடைய செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஒரு சிறுவனின் தந்தை, சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்தார்; வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், 'சைல்டு லைன்' நிர்வாகிகள், நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் வலியுறுத்தினர் என்று தினமலர் செய்தி குறிப்பு கூறுகிறது.


போலீசார் விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தில், திராவிட மணியை கைது செய்தனர். 'இவர், 2016 சட்டசபை தேர்தலில், கூடலுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்; நுாலகங்கள், பள்ளிகளில் பல பொறுப்புகள் வகித்துள்ளார்' என, போலீசார் தெரிவித்தனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.


இதனை தொடர்ந்து ட்விட்டரில் பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து வருகின்றனர். தி.மு.க ஆட்சியில் இல்லாத போதே இப்படியா என்று கொதிக்கின்றனர்.




https://twitter.com/RamaAIADMK/status/1125274744582955008?s=19




https://twitter.com/butcherthem/status/1125290005151141888?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News