Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களின் உயிரில் விளையாடும் தி.மு.க - மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வழங்கியது அம்பலம் : பீதியில் உடன் பிறப்புகள்!

மக்களின் உயிரில் விளையாடும் தி.மு.க - மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வழங்கியது அம்பலம் : பீதியில் உடன் பிறப்புகள்!

மக்களின் உயிரில் விளையாடும் தி.மு.க - மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை வழங்கியது அம்பலம் :  பீதியில் உடன் பிறப்புகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2020 6:08 AM GMT

இந்த நேரத்திலும் சும்மா இருந்தால், மக்கள் நம்மை தூசியாக கூட மதிக்க மாட்டார்கள் என்று ஊரடங்கு அமலுக்கு வந்து பத்து நாட்களுக்கு பிறகு, திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான மு.க.ஸ்டாலின் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கினார்.

திமுக விளம்பரம் பதிக்கப்பட்ட கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் ஆடைகள், போர்வைகள், சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் திமுக மருத்துவரணி சார்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு பொருட்தொகுப்பு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கொரோனா பரவியுள்ள இந்த நேரத்தில், சளி, இருமல், காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்தால் மக்கள் மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் திடுக்கிடும் நிகழ்வாக, சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் கொண்ட தொகுப்பை திமுகவினர் வழங்கி வருகின்றனர். மருத்துவர் பரிந்துரையின்றி எந்த மாத்திரை உட்கொண்டாலும் அது ஆபத்துக்கு வழி வகுக்கும். இந்த நிலையில் காய்ச்சலை குறைத்து காண்பிக்கும் மாத்திரைகளை திமுகவினர் வழங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News