Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல்.? சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.!

சட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல்.? சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.!

சட்டப்பேரவையின் மாண்பை கெடுத்த தி.மு.க உறுப்பினர் செந்தில் பாலாஜியின் இழிசெயல்.? சபாநாயகர் தனபால் விடுத்த எச்சரிக்கை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2019 1:44 PM GMT


சட்டப்பேரவையின் மாண்பை கெடுக்கும்
வகையில் செயல்படக் கூடாது என திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு,
சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உயர் மின் கோபுரம் தொடர்பான எதிர்க்கட்சி
தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதில்
அளித்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி, எழுந்து
நின்று கையை நீட்டி பேசி ரகளையில் ஈடுபட்டார். இதனால் அவையில் சிறிது நேரம்
சலசலப்பு நிலவியது. பேரவையில் ரகளையில் ஈடுபட்ட செந்தில் பாலாஜிக்கு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.


எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு
மின்துறை அமைச்சர் பதில் அளித்து கொண்டிருக்கும் போது எழுந்து நின்று கையை
நீட்டி பேசிய ரகளையில் ஈடுபட்ட திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு
சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவையின் மாண்பை கெடுக்கும்
வகையில் செந்தில் பாலாஜி செயல்படக் கூடாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News