அரசாங்கத்துக்கு அட்வைஸ் பண்ற மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளதுப்பாக்கி விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்? மாஃபா பாண்டியராஜன் சாடல்.! #DMK #MFPandiyarajan #MKStalin
அரசாங்கத்துக்கு அட்வைஸ் பண்ற மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளதுப்பாக்கி விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்? மாஃபா பாண்டியராஜன் சாடல்.! #DMK #MFPandiyarajan #MKStalin
By : Kathir Webdesk
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்,
மேலும் பேசிய அவர், " திமுக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு கண்டனம் கூர தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் இது போன்ற செயல்களுக்கு ஊக்கம் அளிக்கவில்லை என்றாவது கூறியிருக்கலாம். அதைக்கூட அவர் சொல்லவில்லை.
அரசாங்கத்தை குறை சொல்வதை மட்டுமே தன் கடமையாக செய்துவருகிறார். இப்படியே சென்றால் தமிழகத்தில் மேலும் பல இடங்களில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதுாக்கிவிடும். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் சரியாக செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் தன் கடமையை செய்வாரா?" என்று பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார்.