Kathir News
Begin typing your search above and press return to search.

தொட்டதில் எல்லாம் மோசடி - தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு 'சீல்'!

தொட்டதில் எல்லாம் மோசடி - தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு 'சீல்'!

தொட்டதில் எல்லாம் மோசடி - தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு சீல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 March 2020 12:19 PM IST

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்த நிலையில், அவரது ஆலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி 'சீல்' வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து 'சீல்' வைத்து வருகின்றனர்.

இதில் வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதும், 37 ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரிய வந்தது. உரிமம் பெறாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்பாடி அருகே உள்ள உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலை ஆழ்துளை கிணறுக்கு வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News