சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் 40 பேருக்கு கிடுகிடுவென பரவிய கொரோனா - பாதிரியார் கை பட்டதால் நேர்ந்த விபரீதம்!
சர்ச்சில் தெளிக்கப்பட்ட புனித நீரால் 40 பேருக்கு கிடுகிடுவென பரவிய கொரோனா - பாதிரியார் கை பட்டதால் நேர்ந்த விபரீதம்!

கொரோனாவை தடுக்க தென் கொரிய நாட்டில் உள்ள தேவாலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாட்டின் முடிவில் வழங்கப்பட்ட புனித நீரால் சுமார் 46 பேருக்கு கொரோனா பரவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென் கொரிய நாட்டில் உள்ள சியோங்னமில் நகரில் உள்ள தேவாலயத்தில், கடந்த மார்ச் 8 ஆம் தேதி, கொரோனாவை தடுக்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் 90 பேர் கலந்து கொண்டனர். அதன் முடிவில் அனைவருக்கும் ஒரே பாட்டிலில் புனித நீர் வழங்கப்பட்டது. பாட்டிலில் இருந்த புனித நீரை, வழிபாட்டுக்கு வந்தவர்கள் வாய்க்குள் படும்படி பாதிரியார் வைத்துள்ளார்.
இந்நிலையில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக உடல்நிலை சரியில்லாத நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் வழிப்பாட்டில் பங்கேற்றவர்களில் பாதிரியார், அவரது மனைவி உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புனித நீரை கையால் தொட்டு பாதிரியார் வாயில் ஊற்றி உள்ளார். இதன் மூலம் கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது. இது குறித்து பேசிய பாதிரியார், நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பழியையும் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.