Kathir News
Begin typing your search above and press return to search.

இனி முதியோர்கள், மற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்! மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி!

இனி முதியோர்கள், மற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்! மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி!

இனி முதியோர்கள், மற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கலாம்!  மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2019 5:50 AM GMT


பொது தேர்தல்களின் போது, பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், தங்கள் ஓட்டுக்களை அளிக்க, ஓட்டுச்சாவடிக்கு வர முடியாது. இதனால், அவர்கள், தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலில் உள்ளது.


இதைப் போலவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்கள் உடல்நிலை காரணமாக, வாக்குச்சாவடிக்கு வரமுடியாத நிலை உள்ளது. இந்த கஷ்டத்தை தவிர்க்கும் வகையில், அவர்களையும் தபால் ஓட்டு அளிக்க, வழிவகை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.


இதை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், அடுத்த தேர்தல் முதல் தபால் மூலம் வாக்கை அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு சிரமம் குறைவது மட்டுமல்லாமல் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தேர்தல் கமிஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News