Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் அதிரடி காட்டும் அமலாக்கத்துறை - முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் -சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் அதிரடி காட்டும் அமலாக்கத்துறை - முக்கிய புள்ளிகள் சிக்குவார்களா?

KarthigaBy : Karthiga

  |  6 Aug 2022 7:00 AM GMT

சட்டவிரோத பண பரிமாற்ற புகார் தொடர்பாக நாடு முழுவதும் 47 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன அதிபரின் வீடு, எழும்பூரில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் தியாகராயர் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணையை பாதிக்கும் என்பதால் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். சோதனை முழுவதும் முடிந்த பின்னரே நடைபெற்ற இடங்கள் குறித்த விவரத்தையும் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள், பொருட்கள் குறித்த விவரங்களை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News