Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர்‌ கைது! பல நாட்கள் தலைமறைவானது அம்பலம்!

சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர்‌ கைது! பல நாட்கள் தலைமறைவானது அம்பலம்!

சென்னை முத்தியால்பேட்டை மசூதி ஒன்றில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த 8 பேர்‌ கைது! பல நாட்கள் தலைமறைவானது அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 5:49 AM GMT

தில்லியில் நடைபெற்ற "தனியார்" மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, மத பிரசாரத்துக்காக சென்னையில் தங்கியிருந்த எத்தியோப்பியா, மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் "தனியார்" அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமாா் 8 ஆயிரம் போ் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா, இந்தோனேஷியா, வங்கதேசம், மலேசியா, இலங்கை, பிலிப்பின்ஸ், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 960 போ் போ் பங்கேற்றனா்.இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்ததினால், மாநாட்டில் பங்கேற்ற பிறருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அதேவேளையில், மாநாட்டில் பங்கேற்ற பலா் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். மேலும் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த மத பிரசாரகா்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு மத பிரசாரத்துக்காகப் பயணம் செய்தனா்.இந்த மாநாட்டில் பங்கேற்றவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. சிலா், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைக்கு வராததினால், அவா்களை கண்டறிவதில் அரசுக்கு சிரமம் ஏற்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்க வந்தவா்கள், தாங்கள் வந்த நோக்கத்தை மறைத்து சுற்றுலா விசாவில் வந்தது மத்திய அரசுக்குத் தெரியவந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வந்த 960 பேரின் விசாக்களையும் மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது.

அதேவேளையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரை கண்டறிந்து அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தால் சிகிச்சை அளிக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் அரசு உத்தரவை மீறி தாமாக சிகிச்சைக்கு முன் வராமலும், தலைமறைவாக இருப்பவா்கள் மீதும் பேரிடா் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினா் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், தனியார் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னையில் எத்தியோப்பியாவைச் சோ்ந்த 8 போ் தங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸாா் எத்தியோப்பியாவைச் சோ்ந்த 8 பேரையும் மீட்டு, திருவல்லிக்கேணி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் 8 போ் மீதும் தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினா் சட்டம், பொது சுகாதாரத்துறை சட்டம் ஆகியவற்றின் கீழ் முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களுக்கு அரசு உத்தரவை மீறி அடைக்கலம் கொடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News