Begin typing your search above and press return to search.
நடிப்பதற்காக பிரத்யேகமாக கதை - கவுதம் மேனன்!
நடிப்பதற்காக பிரத்யேகமாக கதை - கவுதம் மேனன்!

By :
இயக்குனர் - தயாரிப்பாளர் என அறியப்பட்ட கவுதம் மேனன், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. தற்போது சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இது குறித்து பேசியுள்ளார் கவுதம் மேனன்.
அதில் 'ஒரு சிலரை எனக்காக, எனக்குத் தோதாக இருக்கும்படி முழு நீளக் கதை ஒன்றை எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் கவலை இல்லை." என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கவுதம் மேனன் தொடர்ந்து நடிக்கவும் செய்வார் என்று தெரிகிறது.
Next Story