Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்றின் 4-ஆம் நிலைக்கு செல்லும் இந்தியாவின் அண்டை நாடு - கதறும் நிபுணர்கள் : நிலையை சாமர்த்தியமாக கையாளும் இந்தியா!

கொரோனா தொற்றின் 4-ஆம் நிலைக்கு செல்லும் இந்தியாவின் அண்டை நாடு - கதறும் நிபுணர்கள் : நிலையை சாமர்த்தியமாக கையாளும் இந்தியா!

கொரோனா தொற்றின் 4-ஆம் நிலைக்கு செல்லும் இந்தியாவின் அண்டை நாடு - கதறும் நிபுணர்கள் : நிலையை சாமர்த்தியமாக கையாளும் இந்தியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 6:46 AM GMT

தினமும் ஆயிரக்கணக்கான நோய் தொற்று மற்றும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் 4 ஆம் கட்டத்தின் விளிம்பில் பங்களாதேஷ் கலங்குகிறது என்று பொது சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளை அங்கு சரியா அமல்படுத்த முடியவில்லை.

டாக்கா ட்ரிப்யூனில் அறிக்கையின் படி, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 9 வரை புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை "600% உயர்ந்துள்ளது" என்று கூறுகிறது. முதல் கோவிட் -19 பாதிப்பு மார்ச் 8 அன்று நாட்டில் கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, ஏப்ரல் 1 வரை, பங்களாதேஷில் ஆறு கொரோனா உயிரிழப்புகள் மற்றும் 54 கோவிட் -19 நோயாளிகள் மட்டுமே பதிவாகியுள்ளனர். ஆனால் ஏப்ரல் 9 அன்று (வியாழக்கிழமை) 21 இறப்புக்கள் மற்றும் 330 பேருக்கு பாதிப்பு உயர்ந்தது.

தொற்றுநோயியல், நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.இ.டி.சி.ஆர்) இயக்குனர், பேராசிரியர் மீர்ஜாடி சப்ரினா ஃப்ளோரா வியாழக்கிழமை பேசுகையில், முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால், நிலைமை கட்டுப்பாட்டை மீறி, பங்களாதேஷ் தொற்றுநோயின் 4 ஆம் கட்டத்தை அடையும் என்று கூறியுள்ளார்.

"நாங்கள் இப்போது தொற்றுநோயின் 3 வது கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் சமூக விலகல் விதிமுறைகள் மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்படாவிட்டால், ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால், நாங்கள் 4 ஆம் கட்டத்திற்குள் நுழைவோம், "என்று அவர் எச்சரித்தார்.

நிலை 4 என்பது வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதது மற்றும் நோய்த்தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் பதிவாகும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News