பிறந்த குழந்தைக்கு "லாக் டவுன்" என பெயர் சூட்டிய தந்தை!
பிறந்த குழந்தைக்கு "லாக் டவுன்" என பெயர் சூட்டிய தந்தை!
By : Kathir Webdesk
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு 'லாக் டவுன்' என பெயர் வைத்துள்ளார் குழந்தையின் தந்தை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கொண்டு இருக்கிறது. இதனால் 47ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும் 21 நாட்களில் விதித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு சமயத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு "கொரோனா" என பெயர் வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் சின்னமாக இருப்பதற்காக இந்த பெயரை வைத்தாக குழந்தையின் மாமா தெரிவித்தார்.
இதனைப் போலவே தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு "லாக் டவுன்" என பெயர் வைத்துள்ளனர். இதை பற்றி பிறந்த ஆண் குழந்தையின் தந்தை கூறியது: நான் மார்ச் 29ஆம் தேதி என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் அங்கு எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அனைவரும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு வீட்டிலேயே இருந்து வருகிறோம். இதற்காக என் குழந்தைக்கு "லாக் டவுன்" என பெயர் வைத்துள்ளேன் என்றார்.
மேலும் கொரோனா வைரஸிருந்து நம்மை காப்பாற்ற பிரதமர் மோடி அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்