Kathir News
Begin typing your search above and press return to search.

ஜி20 நாடுகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த வேண்டுகோள்!

ஜி20 நாடுகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த வேண்டுகோள்!

ஜி20 நாடுகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த வேண்டுகோள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2019 11:47 AM GMT


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்தியக் குழு கலந்து கொண்டது.


நிதியமைச்சர் தலைமையிலான இந்தக் குழு வாஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்திலும் பங்கேற்றது.


ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், இதனைக் குறைப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.


உலகப் பொருளாதாரத் தேக்க நிலையை சமாளிக்க உறுதியான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு ஜி20 அமைப்புக்கு உண்டு என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேக்கநிலையை சமாளிக்க, சீர்திருத்த நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


உலகளாவிய வளர்ச்சி மீண்டும் வேகம் பெற கூட்டு நடவடிக்கையை ஜி20 அமைப்பு உறுதி செய்ய வேண்டியது அவசியம் என நிதியமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News