குமாரசாமியின் மகன் திருமணத்தில் ஒருவர் கூட ஊரடங்கு விதியை பின்பற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!
குமாரசாமியின் மகன் திருமணத்தில் ஒருவர் கூட ஊரடங்கு விதியை பின்பற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!
By : Kathir Webdesk
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் மற்றும் ரேவதி என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது, இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக குமாரசாமியின் பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது. இத்திருமணத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
எளிமையாக நடந்தது இருந்தாலும் கூட இத்திருமணத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூட முகக் கவசம் அணியவில்லை, தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கவில்லை இதனால் சர்ச்சை எழுந்துள்ளது, ஊரடங்கு சமயத்தில் பின்பற்ற வேண்டிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் விதிமீறல் நடந்து இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா துணை முதலமைச்சர் அஷ்வத் நாராயணா திருமணம் குறித்து வீடியோ காட்சிகள் துணை கமிஷனரிடம் கேட்டு இருப்பதாகவும் ஊரடங்கு மீறல் மற்றும் தவறு ஏதும் நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.