Begin typing your search above and press return to search.
ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பி கொடுக்க முடிவு, சுமார் 14 லட்சம் பேர் பயனடைவார்கள்- மத்திய நிதி அமைச்சகம்
ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பி கொடுக்க முடிவு, சுமார் 14 லட்சம் பேர் பயனடைவார்கள்- மத்திய நிதி அமைச்சகம்
By : Kathir Webdesk
கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டியும், ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகையும் திருப்பிக் கொடுக்கவும் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள்.
அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பி கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்கள் இதன் முலம் பயன் பெறும். தோராயமாக, ரூ. 18,000 கோடி மொத்த திருப்பி கொடுத்தல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
Next Story