Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்திலும் ஜி.எஸ்.டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது!

குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்திலும் ஜி.எஸ்.டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது!

குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்திலும் ஜி.எஸ்.டி வரி வசூல் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 March 2020 11:18 AM IST

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு 1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்த விபரங்களை மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் 20 ஆயிரத்து 569 கோடி ரூபாயும் மாநில ஜி.எஸ்.டி. மூலம் 27 ஆயிரத்து 348 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 48 ஆயிரத்து 503 கோடி ரூபாயும் கூடுதல் வரி மூலம் 8 ஆயிரத்து 947 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

முக்கிய மாநிலங்கள் வலுவான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன. கர்நாடகாவின் ஜிஎஸ்டி வருவாய் 15 சதவீதமும், உத்தரப்பிரதேசத்தின் 13 சதவீதமும், மகாராஷ்டிராவின் 12 சதவீதமும், குஜராத்தின் 11 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், பிற முக்கிய மாநிலங்களான ஹரியானா மற்றும் தமிழ்நாடு அவர்களின் ஜிஎஸ்டி வருவாய் ஆண்டுக்கு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, ஜிஎஸ்டி வசூல் பிப்ரவரி மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News