Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார பணியாளர்களையும், போலீசாரையும் கற்களை வீசி தாக்கிய கும்பல் - ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது!

கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார பணியாளர்களையும், போலீசாரையும் கற்களை வீசி தாக்கிய கும்பல் - ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2020 11:39 AM GMT

மொராதாபாத்தின் ஹாஜி நெப் மஸ்ஜித் பகுதியில் புதன்கிழமை கரோனா வைரஸ் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல சென்றபோது சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் குழு தாக்கப்பட்டது.

மொராதாபாத்தின் நவாப்புரா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் பல போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்கள் காயமடைந்த நிலையில், கல் வீச்சில் ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு வாகனங்களும் சேதமடைந்தன.

இதன் பின்னணியில் சர்தாஜ் என்ற நபர் உடல்நிலை சரியில்லாமல் தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மாதிரிகள் ஏப்ரல் 9 ஆம் தேதி சோதனைக்கு அனுப்பப்பட்டன, ஏப்ரல் 13 அன்று வந்த அறிக்கையில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டது. அன்றிரவே சர்தாஜ் இறந்தார். இதனை தொடர்ந்து அவர் வசித்த பகுதி முடக்கப்பட்டது.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஃப்.டி.எம் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் புதன்கிழமை, தனிமைப்படுத்தலுக்காக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சர்தாஜின் தம்பியை அழைத்துச் செல்ல அப்பகுதிக்கு சென்றது.

குழு அந்த இடத்தை அடைந்தவுடன், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து ஒரு கூடினர். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்படுவதைத் தடுக்க அவர்கள் முயன்றனர்.

சுகாதாரக் குழு கூட்டத்தினருக்கு நிலையை விளக்க முயன்றது, ஆனால் உள்ளூர் மக்கள் ஆக்ரோஷமாகி கற்களை வீசத் தொடங்கினர்.

"அவர்களுடன் சென்ற நான்கு போலீஸ்காரர்களும் பின்வாங்க வேண்டியிருந்தது. அவர்களில் ஒருவர் காயமடைந்தார், "என்று அந்த அதிகாரி மேற்கோளிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய ஏ.டி.ஜி (சட்டம் ஒழுங்கு), நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருவதாகவும் லக்னோவில் கூறினார். "இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் கூறினார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News