Kathir News
Begin typing your search above and press return to search.

ஆலப்புழாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சுற்றுலா படகு வீடுகள்.!

ஆலப்புழாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சுற்றுலா படகு வீடுகள்.!

ஆலப்புழாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் சுற்றுலா படகு வீடுகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 April 2020 9:34 AM GMT

ஆலப்புழா மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் அம்ருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள ஓட்டல்கள், மற்றும் தங்கும் விடுதிகளை தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அஞ்சனா கூறினார்.

இது தவிர இன்னும் தேவைப்பட்டால் ஆலப்புழாவில் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் படகு வீடுகளையும் தனிமை வார்டுகளாக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றும், இதற்கு படகு உரிமையாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

இந்த படகு வீடுகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை தனிமைபடுத்தி தங்க வைக்க முடியும் என்று ஆட்சியர் அஞ்சனா கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News