Kathir News
Begin typing your search above and press return to search.

ஐஸ்வர்ய கடாக்‌ஷமாய் இல்லம் மாற என்ன செய்ய வேண்டும்?

ஐஸ்வர்ய கடாக்‌ஷமாய் இல்லம் மாற என்ன செய்ய வேண்டும்?

ஐஸ்வர்ய கடாக்‌ஷமாய் இல்லம் மாற என்ன செய்ய வேண்டும்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 2:23 AM GMT

கண்களுக்கு தெரியாமல் இருக்கும் மஹாலஷ்மியை நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கு எளிமையான ஒரு வழிமுறை வாசனை பொருட்களை நம் அதிகம் வீட்டில் வைக்க வேண்டும் இந்த வாசனையானது நம் வாசலுக்கு வெளியில் செல்லும் அளவிற்கு இருக்க வேண்டும். மஹாலஷ்மியானவள் மாலை ஆறுமணிக்கு மேல் நடமாடுவதாகக் ஐதீகம் அந்த நேரத்தில் யாருடைய வீடு சுத்தமானதாகவும் நறுமணம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ அங்கு சென்று தங்கி விடுவாள்என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

இந்த அதிஷ்ட தேவதையும் நம் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து நிரந்தரமாக அங்கேயே தங்க வைப்பதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. நம் வாழ்வில் தீராத வியாதி கடன் முன்னேற்றமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சாபங்களும் கர்மா வினைகளும் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் நம் குல தெய்வத்தாலும் சில அதிஷ்ட தேவதைகளின் கருணையாலும் தீர்த்துவிட முடியும்.

அதிர்ஷட தேவதை இன்று நாம் குறிப்பிடுவது மஹாலஷ்மியைத்தான். மஹாலஷ்மி நினைத்தால் யாரையும் செல்வந்தராக மாற்ற முடியும். குல தெய்வத்திடம் வேண்டும் போது இந்த இடத்தில மஹாலஷ்மியின் அருளும் கடாச்சமும் நிறைந்திருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும் பிறகு வெற்றிலையில் ஐந்து கிராம்புகளை வைத்து மடித்து கொள்ள வேண்டும் பிறகு ஐந்து பச்சை கற்பூரங்களை எரிய விட்டு அதன் மீது நாம் மடித்து வைத்திருக்கும் வெற்றிலையும் க்ரம்பியும் போட்டு எரிக்க வேண்டும் இது முழுவதுமாக எரிந்து சாம்பலானா பிறகு அந்த சாம்பலை நாம் எடுத்து மடித்து கொள்ள வேண்டும்,

இந்த சாம்பலை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் அதிஷ்ட தேவதை நம்மை தேடி வருவாள். மேலும் இந்த சாம்பல் நமது வீட்டில் உழவர்களின் ஜாதக தோசதியும் மாற்றும் சக்தியும் கொண்டது, திருமண தடை போன்றவற்றையும் இந்த சாம்பல் நீக்கும், தொழில் முடக்கம் வேளையில் பிரச்சனை எல்லாம் சீக்கிரம் தீர்ந்துவிடும்.

மாலை வேளையில் தீபத்துடன் சேர்த்து வாசனை மிகுந்த ஊதுபர்த்திகளை ஏற்ற வேண்டும் அதன் பிறகு ஒரு வெற்றிலை ஐந்து கிராம்பு ஐந்து பச்சை கற்பூரம் வைத்து வழிபட வேண்டும் அதற்க்கு முன்பு வெற்றிலையை குலதெய்வத்தின் முன் வைத்து வழிபட வேண்டும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News