Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் உதவியை எதிர்நோக்கும் 30 உலக நாடுகள் - பாராட்டி தள்ளும் வல்லரசுகள்!

இந்தியாவின் உதவியை எதிர்நோக்கும் 30 உலக நாடுகள் - பாராட்டி தள்ளும் வல்லரசுகள்!

இந்தியாவின் உதவியை எதிர்நோக்கும் 30 உலக நாடுகள் - பாராட்டி தள்ளும் வல்லரசுகள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 March 2020 2:42 PM IST

தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்திலுள்ள அமெரிக்கா நோய்த்தொற்றை கண்டுபிடிக்க 14 தினங்கள் எடுத்துக்கொண்ட போது அவர்களே பாராட்டும்படி வெறும் 4 மணி நேரத்தில் நமது நிபுணர்கள் கண்டறிந்தனர்.

தேவை இல்லாமல் இந்தியாவை விமர்சித்த அதே ஈரான் கொரோனாவால் செய்வதறியாது விழித்தபோது விமானப்படையின் ராட்சத விமானம் மூலம் ஆய்வுகூடத்துடன் கூடிய மருத்துவ நிபுணர் குழுவையும் அனுப்பி நோயுற்றோரையும் நோயற்றோரையும் கண்டறிந்து தனித்தனியாக. அழைத்து வர ஏற்பாடுகள் செய்ததுடன், ஆய்வுகூடத்தையும் ஈரானுக்கே அன்பளிப்பாக அளித்து அதனை வெட்கி தலைகுனியச் செய்த நாடு நம் நாடு.

மிகச்சிறிய நாடாகிய சிங்கப்பூர் நோயைக் கட்டுப்படுத்ததத் தெரியாமல் இந்தியாவிடம் உதவிகேட்கிறது. மாலத்தீவுக்கு ஆய்வுகூடத்துடன் 14 பேர் கொண்ட மருத்துவக்குழுவும் அனுப்பப் பட்டுள்ளது.

இன்னும் 30 நாடுகள் உதவி கோரியுள்ளன. சீனா மற்றும் வியட்னாமிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஏதோ பிரிவினைவாதிகளும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களும் எவ்வளவு தான் தூற்றிய போதிலும் ஜாதி மத மொழி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு வேகமாகப் பரவிவரும் கொரோனாவை விட அதை எதிர்த்து போர் புரியும் இந்திய அரசின் முயற்சியை பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News