Begin typing your search above and press return to search.
மே 3ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
மே 3ம் தேதி வரை பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
By : Kathir Webdesk
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி (இன்று) நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிய இருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை 10 மணிக்கு உரையாற்றினார். அப்போது ஊரடங்கை 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளனர். ப்ரீமீயம் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில், பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள், கொங்கன் ரயில் சேவை, கொல்கத்தா மெட்ரோ சேவை உள்ளிட்ட அனைத்து ரயில்களின் இயக்கமும், மே 3 நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story