Begin typing your search above and press return to search.
லாக் டவுன் முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை 2' - தயாரிப்பாளர் CV குமார்!
லாக் டவுன் முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை 2' - தயாரிப்பாளர் CV குமார்!
By : Kathir Webdesk
2015-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் எழுத, அவரிடம் உதவியாளராக பணிபுரிந்த கார்த்தி இப்படத்தினை இயக்குவதாக அறிவித்தார்.
விஷ்ணு விஷாலே இதிலும் நாயகனாக நடிக்க இந்த படத்தின் திரைக்கதையில் முதல் வரைவை ரவிக்குமார் அனுப்பியுள்ளதாகவும் திரைக்கதை சிறப்பாக வந்திருப்பதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் இப்படத்தினை தயாரிக்கும் CV குமார். இந்நிலையில் இப்பப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் இப்படத்தின் பணிகளைத் துவங்கவுள்ளதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story