Kathir News
Begin typing your search above and press return to search.

"மூலை முடுக்கெல்லாம் கொரோனாவைப் பரப்புங்கள் காஃபிர்களையும் காவலர்களையும் கொல்லுங்கள்" - ISIS வெளியிட்ட ஊரடங்கு சிறப்புக் கட்டுரை.!

"மூலை முடுக்கெல்லாம் கொரோனாவைப் பரப்புங்கள் காஃபிர்களையும் காவலர்களையும் கொல்லுங்கள்" - ISIS வெளியிட்ட ஊரடங்கு சிறப்புக் கட்டுரை.!

மூலை முடுக்கெல்லாம் கொரோனாவைப் பரப்புங்கள்  காஃபிர்களையும் காவலர்களையும் கொல்லுங்கள் - ISIS வெளியிட்ட ஊரடங்கு சிறப்புக் கட்டுரை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 8:03 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் உலகமே முடங்கிப்போய் இருந்தாலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மட்டும் அதன் இந்து எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு செயல்பாடுகளில் இருந்து சற்றும் பின் வாங்கவில்லை. 'Voice of Hind' என்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆன்லைன் இதழில் அவர்களது அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் கொரானா வைரஸை பரப்பி இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்திற்கு என்றே வெளியிடப்பட்டுள்ள 'lockdown edition' என்ற 17 பக்க சிறப்பு கட்டுரையில் காஃபிர்களை கொல்லவும் இஸ்லாமிய மதத்தில் நம்பிக்கையற்றவர்களை அழிக்கவும் அறிவுறுத்தியதோடு டெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் படத்தை வெளியிட்டு பாராட்டு வேறு‌ தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் கட்டுரையில் "நம்பிக்கை உள்ளவர்களே (இஸ்லாமியர்கள்) நிமிர்ந்து நில்லுங்கள்! இது காஃபிர்கள் வீழ்வதற்கான நேரம்" என்று குறிப்பிட்டு டெல்லியில் நடந்த இந்துக்களுக்கு எதிரான வன்முறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த அறிக்கையில் இன்னும் ஒரு படி மேலே போய் முஸ்லிம் அல்லாதவர்களை எப்படி எல்லாம் கொலை செய்யலாம் என்பதற்கு வழிமுறைகளையும் பரிந்துரை செய்துள்ளது. சங்கிலி, கயிறு, வயர் ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் இவற்றைப் பயன்படுத்தி காஃபிர்களை கழுத்தை நெறித்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது. "எப்போதும் ஏதோ ஒரு ஆயுதத்துடன் உங்களால் முடிந்த அளவு காஃபிர்களைக் கொல்ல தயாராக இருங்கள். கத்திரிக்கோல், சுத்தியல் போன்றவை இந்த பணிக்கு உதவிகரமாக இருக்கும்" என்று அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகம்‌‌ அலட்டிக் கொள்ளாமல் அதிக எண்ணிக்கையில் காஃபிர்களையும் காவல்துறையினரையும் ஒழித்துக் கட்ட கொரோனா வைரஸை மூலை முடுக்குகளில் எல்லாம் விரைவாக பரப்பி விடுமாறும் டெல்லியில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்ட குற்றத்திற்காக ஜாமியா மிலியா இஸ்லாமியா சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு பழி‌வாங்குமாறும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டி விட்டுள்ளது. மேலும், தப்லிகி ஜமாத்தையும் அதன் தலைவர் மௌலானா சாத்தையும் கொரானா வைரஸை பரப்பியதற்காக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு புகழ்ந்து தள்ளி இருக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் இருப்பதாகவும் அதன் இந்தியப் பிரிவான ஹிண்ட் விலாயாவில் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாகவும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது நினைவில் கொள்ளத் தக்கது.


நன்றி: Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News