Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸை இந்தியாவில் பல பேருக்கு பரப்பியதாக குறிப்பிட்டு தப்ளிகி ஜமாத்தை புகழ்ந்து தள்ளிய பயங்கரவாத இயக்கம் ISIS!

கொரோனா வைரஸை இந்தியாவில் பல பேருக்கு பரப்பியதாக குறிப்பிட்டு தப்ளிகி ஜமாத்தை புகழ்ந்து தள்ளிய பயங்கரவாத இயக்கம் ISIS!

கொரோனா வைரஸை இந்தியாவில் பல பேருக்கு பரப்பியதாக குறிப்பிட்டு தப்ளிகி ஜமாத்தை புகழ்ந்து தள்ளிய பயங்கரவாத இயக்கம் ISIS!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jun 2020 4:00 PM GMT

டெல்லி கலவரத்தில் நிஜாமுதீன் மார்க்காஸின் தொடர்பு பற்றிய செய்தி வந்திருக்கும் நேரத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளி வந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் லாக் டவுன் சிறப்பு இதழில், தப்லிகி மார்க்கஸின் தலைவரான மௌலானா ஆசாத் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளார். கொரோனா வைரஸை இந்தியாவில் பரப்புவதில் மௌலானா ஆசாத் மற்றும் அவரை பின்பற்றும் தப்ளிகி ஜமாத்தினர் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளதாக பத்திரிகையின் ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை முஸ்லிம்களை குறிவைத்து சித்திரவதை செய்து வருவதாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ் அதை பொறுத்துக்கொள்ளாது என்றும், அவர்களைப் பாதுகாக்க விரைவில் வர இருப்பதாகவும் அந்த கட்டுரை கூறுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்புவதில் முக்கிய பங்காற்றிய மௌலானா ஆசாத் மற்றும் நிஜாமுதீன் மார்க்கஸ் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் என்று பத்திரிகையின் கட்டுரை கூறுகிறது. கட்டுரையில் டெல்லி கலவரம் குறித்து குறிப்பிடுகையில், ஜாமியா மாணவர்களை கைது செய்வதன் மூலம் டெல்லி காவல்துறை அநீதி இழைப்பதாகவும், அவர்களை முஸ்லிம்கள் பழிவாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் பத்திரிகையின் இந்த கட்டுரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் கொரோனோவை காவல்துறை அதிகாரிகள் மற்றும் இஸ்லாத்தை நம்பாதவர்கள் மத்தியில் பரப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை நம்பாதவர்களுக்கு இது ஒரு பொருத்தமான தண்டனை என்றும் கூறப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Source - Dailyhunt

Next Story
கதிர் தொகுப்பு
Trending News