இஸ்ரேல் நாட்டிற்கு சரியான தருணத்தில் உதவியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு நன்றி
இஸ்ரேல் நாட்டிற்கு சரியான தருணத்தில் உதவியதற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு நன்றி
By : Kathir Webdesk
இந்திய பிரதமர் மோடி தனது சாதுர்யமான அரசியல் நடைமுறை மூலம் உலக நாடுகளுக்கு இடையே இந்தியாவிற்கு நன்மதிப்பை உயர்த்தி வருகிறார் என சர்வதேச ஊடகங்கள் புகழ்ந்து வருகின்றன
கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை பணிகளை சிறப்பாக கையாண்டு நோய் பரவலை மோடி அரசு குறைத்துள்ளதாகவும் நோய் தடுப்பு மருந்துகளை சர்வதேச நாடுகளுக்கு இணக்கமான முறையில் வழங்கி வருவது திருப்பதி அளிப்பதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது
ஏப்ரல் 3 ம்தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்திய பிரதமர் மோடியுடன்தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார் இந்த பேச்சு சர்வதேச கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது
கொரோனா நோயை குறைக்கவும் தடுக்கவும் உதவும் ஹைட்ராக்சின் மருந்தை எங்களுக்கு தருமாறு கேட்டுகொண்டார் அதன்படி மோடி அரசு ஐந்து டன் ஹைட்ராக்சின் மருந்தையும் ஹைட்ராக்சின் தாயரிக்க தேவையான மூல பொருட்களையும் ஏற்றுமதி செய்ததன் மூலம் இஸ்ரேல் மற்றும் இந்திய உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது சுட்டுரையில் கூறியுள்ளதாவது அன்புக்குரிய நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இஸ்ரேல் மக்களும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார் இதற்க்கு பாரத பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார் மேலும் மோடி கூறியதாவது கொரோனா தாக்கம் நாம் அனைவருக்கும் சவாலான நேரமாகும் எனவே ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய தருணம் எனவும்
கொரோனாவுக்கு எதிரானபோராட்டத்தில் நட்பு நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்ய இந்திய தேசம் ஆயத்தமகா இருப்பதாக தெரிவித்துள்ளார்