யாருன்னு நினச்சீங்க! நான் சி.எம் - அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க திட்டமா.? ஜாமீனில் வெளிவந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நீதிமன்றம் போட்ட கால்கட்டு!
யாருன்னு நினச்சீங்க! நான் சி.எம் - அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க திட்டமா.? ஜாமீனில் வெளிவந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நீதிமன்றம் போட்ட கால்கட்டு!
By : Kathir Webdesk
அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க கூடும் என்பதால் ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஆந்திர முதல்வராகப் பதவி வகித்தாா். இந்த காலகட்டத்தில் ஆந்திர அரசிடம் ஆதாயம் பெறுவதற்காக, ஜெகன் மோகனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பல தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்தன. இதில் சுமார் 1,172 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, ஜெகன் மோகன் ரெட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின் 15 மாதங்களுக்குப் பிறகு, ஹைதராபாதில் உள்ள சஞ்சல்குடா சிறையில் இருந்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெகன் மோகன் ஜாமீனில் வெளியே வந்தாா். அப்போது, அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும், அழைப்பு விடுக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்தது.
தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராகியுள்ள நிலையில், இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, ஹைதராபாதில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு பரிசீலனைக்கு வந்தது. அந்த மனுவில், தான் மாநில முதல்வராக இருப்பதால் நீதிமன்றம் அழைக்கும் எல்லா நேரத்திலும் நேரில் ஆஜராக இயலாது என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.
ஆனால், அவரது கோரிக்கைக்கு சிபிஐ தரப்பு எதிா்ப்பு தெரிவித்தது. மேலும், ஜெகன் மோகனின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால், அது அவருக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுத்து விடும். அவா் தனது அரசியல் செல்வாக்கு, பண பலம், ஆள் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவாா் என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அவரது மனுவை சிபிஐ சிறப்பு நீதிமனறம் நிராகரித்து விட்டதாக அறிவித்துள்ளது.