Kathir News
Begin typing your search above and press return to search.

"அந்த கூட்டம் பின் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" - கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம் #Karupparkootam @RajBhalajioffl

"அந்த கூட்டம் பின் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" - கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம் #Karupparkootam @RajBhalajioffl

அந்த கூட்டம் பின் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம் - கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம் #Karupparkootam @RajBhalajioffl

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 2:14 PM GMT

"முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த பன்றி கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டமாக அறிக்கை விட்டுள்றார்.

கறுப்பர் கூட்டம் கந்த ஷஷ்டி கவசம் அவமதிப்பு வீடியோ'வை தமிழகத்தில் உணர்வுள்ள இந்துக்கள் அனைவரும் எதிர்த்தே வந்துள்ளனர். அவற்றுள் மானமிகு அரசியல் தலைவர்களும், மரியாதைக்குறிய சினிமா பிரபலங்களும் அடக்கம். அவற்றில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்பொழுது கடும் காட்டமாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை பதிவேற்றியுள்ளார்.

அதில்,

"இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, பௌத்த மதங்களை கடந்து, கொரோனா யாருக்கு வந்தாலும் அம்மாவின் அரசு கனிவுடன் கவனித்து வருகிறது. இதற்கிடையே கோடிக்கணக்கான தமிழர்கள் வணங்கும் முருகப்பெருமானை இழிவுபடுத்துகின்ற அந்த பன்றி கூட்டத்திற்கு பின்னால் இருப்பவர்களை சும்மா விடமாட்டோம்" என கொந்தளித்துள்ளார்.



இந்து சமுதாய மக்கள் அனைவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடை ஒரு சிலர் இதுபோல் வெளியிடுவது ஆறுதல் என இந்து சமுதாய மக்கள் வரவேற்றுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News