Kathir News
Begin typing your search above and press return to search.

கண்மூடித்தனமாக தாக்கும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன்!

கண்மூடித்தனமாக தாக்கும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன்!

கண்மூடித்தனமாக தாக்கும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 4:49 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் செல்வராகவன். இவர் அவ்வப்போது பொது மக்களை அடித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்று இந்நிலையில் தொட்ட பேளூர் கிராமத்தில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனுக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செல்வராகவன் சம்பவ இடத்துக்கு சென்றார் அப்போது அவரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.

ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் செல்வராகவனிடம் சிக்கினார். தனியாக சிக்கிய வரை நீளமாக பைப் மூலம் சரமாரியாக கண்மூடித்தனமாகத் எஸ்ஐ செல்வராகவன் தாக்கியுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார், சூதாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வது முறையான நடவடிக்கை தான் ஆனால் இதுபோன்ற கண்மூடித்தனமான தாக்குவது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் இதற்கு முன்னர் மத ஊர்வலத்தில் காலால் எட்டி உதைத்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News