Kathir News
Begin typing your search above and press return to search.

#9PM9Minute இன்றிரவு 9 மணிக்கு தீபம் ஏற்றுவோம் : மலையாள சூப்பர்ஸ்டார்கள் வேண்டுகோள்

#9PM9Minute இன்றிரவு 9 மணிக்கு தீபம் ஏற்றுவோம் : மலையாள சூப்பர்ஸ்டார்கள் வேண்டுகோள்

#9PM9Minute இன்றிரவு 9 மணிக்கு தீபம் ஏற்றுவோம் : மலையாள சூப்பர்ஸ்டார்கள் வேண்டுகோள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 April 2020 10:58 AM GMT

மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர், இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா-வை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையை கடைபிடிப்பதை உணர்த்தும் வகையில், இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்றுமாறு பொதுமக்கள் அனைவரையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதற்கு ஆதரவு தெரிவித்து அவ்வண்ணமே பொது மக்களை கேட்டுகொன்டுள்ளனர் மம்மூட்டி மற்றும் மோகன்லால்.

இது குறித்து மோகன்லால் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நமது வீட்டின் வாசல்களில் விளக்கேற்றுவோம். நாம் ஏற்றும் இந்த தீபம், இந்தியர்களிடையே நம்பிக்கையையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். லோக ஸமஸ்தா சுகினோ பவந்து!", என்று கூறியுள்ளார்.

மம்மூட்டி வெளியிட்டுள்ள காணொளியில், " ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் இந்த கஷ்டமான தருணத்தில், நமது பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஏப்ரல் 5 ஆம் தேதி, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் அவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவோம்", என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News