உபி: மதத்தை மறைத்து காதலித்து, தாய்-மகள் இருவரையும் கொலை செய்து வீட்டில் புதைத்த கொடூரம் - லவ் ஜிகாத்?
தன் அடையாளம் தெரியவந்ததை அடுத்து ஷம்ஷத் இருவரையும் கொலை செய்து சடலத்தை தனது வீட்டில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
By : Kathir Webdesk
லவ் ஜிகாத் என சந்தேகப்படும் விதமாக, மீரட்டைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞரான ஷம்ஷத், அமித் குர்ஜார் என தன் அடையாளத்தை மறைத்து, ஒரு இந்து பெண் பிரியாவுடன் நட்பு கொண்டார். தன் குட்டு வெளிப்பட்டவுடன் பிரச்சினை ஏற்பட்டதால் பிரியா மற்றும் அவர் மகள் இருவரையும் கொடூரமாக கொலை செய்து, இருவரின் சடலத்தை தனது சொந்த வீட்டில் அடக்கம் செய்தான். இது குறித்த ஒரு நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.
ஷம்ஷத், அமித் குர்ஜார் எனத் தன்னைக் காட்டி, 2013 ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் பிரியாவுடன் நட்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் காதலித்தனர். ஒரு குழந்தையுடன் விவாகரத்து பெற்ற பிரியா, தனது இரண்டு வயது மகளுடன் 2013ல் மீரட்டில் அமித் குர்ஜார் அல்லது ஷம்ஷத்துடன் வசிக்க புறப்பட்டார்.
பிரியா கடந்த காலத்தில், ஷம்ஷத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். அவர் மீது ஒரு கற்பழிப்பு புகார் அளித்தார், ஷம்ஷத்தின் தூண்டுதலின் பேரில் அவர் தனது புகாரைப் பின்னர் வாபஸ் பெற்றார்.
மார்ச் 28, 2020 முதல் பிரியாவும் அவரது மகளும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. பிரியாவின் நண்பர் சஞ்சல் சவுத்ரி, மார்ச் 28 அன்று பிரியாவுடன் கடைசியாக பேசியதை உறுதிப்படுத்தினார்,அதன் பிறகு அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஷம்ஷத், இத்தனை ஆண்டுகளில், பிரியாவை தனது குடும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என்பதை சஞ்சல் வெளிப்படுத்தியிருந்தார். அவர்கள் ஒரு தனி வீட்டில் வசித்து வந்தனர். 2018 ஆம் ஆண்டில் ஷம்ஷத்தின் உண்மையான அடையாளத்தைப் பற்றி பிரியா அறிந்திருந்தார், அதன் பிறகு அவர்களது உறவு மோசமடைந்தது.
போலிசார், ஜூன் 2 ம் தேதி, சஞ்சலை தனது புகாரை திரும்பப் பெறுமாறு கட்டாயப்படுத்தினர். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து பஜ்ரங் தள உறுப்பினர் மணீஷ் லோஹியாவுக்குத் தெரிந்ததும், அவர் மீரட் SSPக்கு இது குறித்து விளக்கமளித்தார், அதைத் தொடர்ந்து SSP அஜய் சஹானி இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கி மீரட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஷம்ஷத்தை கைது செய்தார்.
मेरठ : प्रिया और उसकी मासूम बेटी को मारकर शमशाद ने कहां छिपाया, देखिए...pic.twitter.com/r0y8ZCOhqe
— Sachin Gupta | सचिन गुप्ता (@sachingupta787) July 23, 2020
பிரியா மற்றும் அவரது குழந்தையின் சிதைந்த உடல்களை மீட்க மீரட் போலீசார் ஷம்ஷத்தின் வீட்டை தோண்டினர். தன் அடையாளம் தெரியவந்ததை அடுத்து ஷம்ஷத் இருவரையும் கொலை செய்ததாகவும், சடலத்தை தனது சொந்த வீட்டில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. காணாமல் போன தாய்-குழந்தை பற்றிய மர்மம் முடிவுக்கு வந்தது.
நிருபர் சச்சின் குப்தா பகிர்ந்த வீடியோ, காவல்துறையினர் ஷம்ஷத்தின் வீட்டிற்குள் நுழைவதைக் காட்டியது. தொடர்ச்சியான கதவுகள் மற்றும் அறைகளுக்குப் பிறகு, படுக்கையறை இருந்தது. தளம் தரைவிரிப்பு செய்யப்பட்டது. போலிஸ் குழு சிமென்ட் தரையை உடைத்து சில அடி ஆழத்தில், தாய்-மகள் இருவரின் சிதைந்த சடலங்களைக் கொண்ட ஒரு பெரிய துணி மூட்டையை வெளியே எடுத்தனர்.
தாய் மற்றும் மகளின் சடலங்களை மீட்ட பின்னர், மீரட் போலீசார் ஷம்ஷத்தின் வீட்டை இடித்துள்ளனர்.