Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசம் - பெரும்பான்மை நிரூபிக்கும் முன்னரே முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார்!

மத்திய பிரதேசம் - பெரும்பான்மை நிரூபிக்கும் முன்னரே முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 March 2020 3:19 PM IST

மத்திய பிரதேசத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஆளுநருக்கு அளித்ததை தொடர்ந்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து மாநில அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திய முதல்வர் கமல்நாத் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகாவை கடுமையாக விமர்சித்தார். பின்னர் தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News